Tuesday 7th of May 2024 04:10:45 AM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனா தொற்றுக்குள்ளான இந்தியர்கள்: கொழும்பு துறைமுகத்தில் 19 பேர் தனிமைப்படுத்தல்!

கொரோனா தொற்றுக்குள்ளான இந்தியர்கள்: கொழும்பு துறைமுகத்தில் 19 பேர் தனிமைப்படுத்தல்!


திருகோணமலை துறைமுகத்துக்கு வருகை தந்த கப்பலொன்றில் 17 இந்தியப் பிரஜைகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் தொடர்பு பட்டதாக கொழும்பு துறைமுகத்தில் 19 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

திருகோணமலை துறைமுகத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் எரிபொருளை கொண்டு செல்வதற்காக வருகை தந்துள்ளது.

இந்த நிலையில், கப்பலில் வருகை தந்த ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து, கொரோனா தொற்றுக்குள்ளான 17 இந்தியப் பிரஜைகளும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகைதருவதற்கு முன்னதாக கொழும்பு துறைமுகத்திற்கு சென்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த கப்பலுடன் கொழும்பு துறைமுகத்தில் தொடர்புபட்டிருந்த சேவையாளர்கள் 3 பேர் உள்ளிட்ட 19 பேர் அடையாளம் காணப்பட்டு சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, இலங்கை, கிழக்கு மாகாணம், கொழும்பு, திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE